திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஐன்ஸ்டீன் ரொம்ப நல்லவர்!

ஆண்களைப்பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அவதூறுகள் அவ்வப்போது கிளம்பினாலும், சில ஆண்கள் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு இன்னிக்கி கேள்விப்பட்ட சம்பவம் ஒண்ணு பளிச்சுன்னு புரியவச்சுது...

அப்படிப்பட்ட 'அநியாயத்துக்கு நல்லவங்க' பட்டியலில் நம்ம ஐன்ஸ்டீனுக்கு முதலிடம் கொடுக்கலாம்ன்னு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கல்லாம் அழுத்தமா சொல்றாங்கன்னா பாருங்களேன்...

ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பா சொல்லணும்ன்னா நம்ம புவியோட ஈர்ப்பு விசையைப்பற்றி எல்லாருக்கும் எடுத்துச்சொன்னவர், தன்னோட மனைவிமேல எவ்வளவு அன்பாகவும், குடும்ப வாழ்க்கையில எத்தனை பொறுமையாவும் இருந்திருக்கார் தெரியுமா?

பகல் இரவென்று பாராமல், தனது ஆராய்ச்சிகளிலேயே எப்போதும் மூழ்கிக்கிடந்த ஐன்ஸ்டீன் வீட்டிலும், "விடிஞ்சது முதல் அத்தனை வேலையும் நானே தான் இழுத்துப்போட்டுட்டு செய்யறேன். வீட்டிலே இருக்கிறப்பவாவது ஏதாவது உதவி செய்யக்கூடாதா?" என்பது மாதிரியான புலம்பல்கள் அடிக்கடி உண்டுபோலிருக்கிறது.

அன்றும் ஏகப்பட்ட எரிச்சலில் அந்தம்மா, முன்னால் நடந்தது, பின்னால் நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் கூட்டிப்பெருக்கி உச்சஸ்தாயியில் உச்சாடனம் பண்ண, அசையவேயில்லையே மனுஷர்.

"நோபல் பரிசு வாங்கினாப் போதுமா? மனைவியோட மனசைப் புரிஞ்சுக்க வேண்டாமா?" என்று புலம்பி, எதற்கும் அசையாமல் அமைதியாயிருந்த ஐன்ஸ்டீனின் மேல் கோபம் இன்னும் அதிகமாக, ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டுபோய் அவரது அறையில்,ஆராய்ச்சி பற்றிய புத்தகங்களோடும் கட்டுரைகளோடும் உட்கார்ந்திருந்த அவர் தலையில் போய் மொத்தமாய்க் கவிழ்த்தாள் அவர் மனைவி. அத்தனை பொருட்களும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிப் புத்தகங்களும் தொப்பலாய் நனைந்துபோக,..............................................................................................................................................................................................................................................................................ஐன்ஸ்டீன் என்ன செய்திருப்பார்ன்னு நினைக்கிறீங்க???............................................................................................................................................................

முகத்தில் வழிந்த நீரைக் கையால் வழித்துவிட்டு, சிரித்தபடி, "இவ்வளவு நேரமும் இடி இடிச்சுது, இப்போ, மழையும் பெய்யிது" ன்னு சொன்னாராம்!!!

எவ்வளவு நல்லவர் பாருங்க நம்ம ஐன்ஸ்டீன்!!!

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக