திங்கள், 2 மார்ச், 2020

தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்




வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். 

இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் சார்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் எனும் தாங்க முடியாத வயிற்று வலி உண்டாகிறது. 

சைவ சமையத்தைச் சார்ந்த அவருடைய தமக்கையார் திலகவதியாரின் வேண்டுகோளின்படி, திருவதிகை வீரட்டானேசுவரராகிய சிவனிடம் வந்து, தம்முடைய வலியை, வேதனையை முறையிட்டு, பதிகம் எனும் பத்துப் பாடல்களை மனமுருகிப் பாடி, தம் வயிற்று நோயிலிருந்து விடுபட்டார் தருமசேனர். அதன் பின் தருமசேனராயிருந்த அவர் திருநாவுக்கரசரானார்.

அந்தப் பத்துப் பாடல்களில், முதலாவது பாடலே கூற்றாயினவாறு விலக்ககலீர் எனும் இப்பாடல். மனமுருகி முறையிட்ட பாடல், மருந்தாகி வேதனைகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை.

பாடலுக்கான முழுமையான விளக்கம், கீழுள்ள காணொளியில் உண்டு 👇👇👇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக