புதன், 15 ஏப்ரல், 2020

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்





அம்மை நோய் மற்றும் தோல் நோய்களுக்கும், நோய்கள் பரவும் காலத்தில் நோய் எதிர்ப்பிற்கும் வேப்பிலையைப் பயன்படுத்துவது நம் மக்களின் பாரம்பரிய வழக்கம். 

வீட்டு முற்றத்திலும், வீதியோரங்களிலும், கோயில்கள், பள்ளிகள் மற்றும் மைதானங்களிலும் வேப்ப மரங்கள் பெருமளவில் வளர்ப்பதை நாம் வழக்கமாகப் பார்த்திருப்போம்.

வேப்ப மரத்துக் காற்று வியாதிகளை விரட்டும் என்று வாய்வழியாகச் சொல்லப்படுவதும் வழிவழியாக நம்பப்படுவதும் நம் சமூகத்தில் வழக்கம்.

வேப்பிலையைப் பறித்து உடம்புக்கும் தலைக்கும் தேய்க்கப் பயன்படுத்துவதும், அரைத்துக் குடிப்பதும் தொன்றுதொட்டு கிராமத்து மக்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்களாகும். தற்காலத்தில் வேப்பிலை கிடைக்காத பகுதிகளில் நாம் இருந்தாலும், கடைகளில் கிடைக்கும் வேப்பிலைப் பொடி அல்லது வேப்பிலை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நோய் பரவும் காலங்களில், பொதுவாக,  விஷக்காய்ச்சல்கள் மற்றும் அம்மை பரவும் சமயங்களில், எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டி வைத்தியமான, விஷக்குறுணி எனும் சிறப்பான மருந்து தயாரிக்கும் செய்முறையையும் கீழுள்ள காணொளியில் காணலாம்.

வேம்பின் மருத்துவ குணங்களையும், அதன் 10 சிறப்பான பயன்களையும் பற்றிக் கீழுள்ள 👇👇👇 காணொளியில் காணலாம்.