புதன், 9 மார்ச், 2011

அடிக்கடி வீட்டில் பிரச்சனையா?

வசிக்கிற வீடுகளை அழகுபடுத்தவேண்டுமென்கிற ஆவல் மக்களனைவருக்கும் பொதுவான ஒன்று.

பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.


உத்தம லக்ஷணங்களை உடைய பெண்கள் பார்க்க-மாமரங்களும்; நகைக்க-முல்லையும்; பாட-குரக்கத்தியும்; ஆட-புன்னையும்; உதைக்க-அசோகமும்; அணைக்க-மருதோன்றியும்; நட்புற-பாலையும்; நிந்திக்க-பாதிரியும்; சுவைக்க(முத்தமிட)-மகிழமரமும்; நிழல்பட-சண்பகமும் தளிர்த்து, அரும்பிப் பூக்கும்.

இதனை வில்லிபுத்தூராரும்:
ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.
“பொன் கொண்டு இழைத்த” என்று கம்பரால் புகழப்பட்ட இலங்கையில், இராவணன் ஏன் சீதையை அசோகவனத்தில் சிறையிலிட்டான்?

ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.

"அசோகம்' என்பதற்கு சோகத்தை அகற்றுவது என்று பொருளாகும். சோகம் நம்மிடம் எப்பொழுது குடிகொள்ளும்? மனம் பாதித்த நிலையில், மன உளைச்ச லுக்கு உட்பட்டு, உடல் நலிவடைந்து, ஆன்மா அவதிக்கு உள்ளாகும் பொழுது சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது.

இராவணன் தீவிர சிவபக்தன்தான். அவன் கண்மூடி தியானித்து மனமுருக வேண்டி னாலே எம்பெருமான் சிவன் நொடிப் பொழுதில் அவனருகில் தோன்றி, அவனுக்கு அருளாசியை வழங்கும் தன்மையைப் பெற்றவன். அப்பேர்ப்பட்ட இராவணன் மனம் பேதலித்து, சஞ்சலமடைந்து, பகவான் ஸ்ரீராம பிரானின் நாயகியாம் சீதாதேவியின்மீது ஆசை கொண்டு அவளைச் சிறையெடுத்துச் சென்றான்.

இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி சிறை வைக்கப்பட்ட இடம், அடர்ந்து வளர்ந்த அசோக வனமாகும். மணாளனைப் பிரிந்த சீதாபிராட்டியார் சோகமே உருவாகி, எப்பொழுதும் ஸ்ரீராம பிரானையே வேண்டிக் கொண்டிருந்தாள். எப்படியும் எம்பெருமான் வெகுசீக்கிரம் வந்து என்னை மீட்டெடுப்பார் என்று நம்பினாள். மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.

அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான்- சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது.

மகாவீரர் ஞானம் பெற்றதும், புத்தபிரான் அவதரித்ததும் அசோக மரத்தின் அடியில் தான். "உளுத்த உடலை இறுக்கி, உடலுக்கு வன்மை தரும் மூலிகை அசோகு' என்று தேரையர் என்னும் சித்தர் குறிப்பிட்டுள்ளார். மேன்மையான குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோக மரத்தினை, ஸ்ரீராம பிரான்- சீதாதேவியை மனதால் நினைத்து வலம் வர, சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம்.

உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

காதலுக்கு என்று ஒரு மரம் ,,எது தெரியுமா?ராமாயணத்தில் சீதாபிராட்டியாரை
இலங்கேஸ்வரன் அசோக மரங்கள் சூழ்ந்த வனத்தில் சிறைப்ப்டுத்தினானே அந்த
அசோக மரம் தான் காதலுகென்ற மரம் சம்ஸ்கிருதத்தில் அசோகா என்றால் சோகம்
இல்லாத " என்று அர்த்தம் இரவில் அதிக நறுமணம் வீசும் சிவந்த மஞ்சள் அல்லது
ஆரஞ்சு நிறப்பூக்களைக் கொண்டது இது பர்மா இலங்கை மலேசியா இந்தியாவைப்
பூர்வீகமாகக் கொண்டதாகும் இதை மக்கள் காதலின் சின்னமாகக் கருதி காமதேவனுக்கு
அர்ப்பிக்கிறார்கள் காமதேவன் காதலின் சின்னம் ஆனவன் கோயில் அலங்காரங்களிலும்
பயன் படுத்துகின்றனர் மரங்களின் தேவர்கள் விருக்ஷதேவர்கள் இம் மரத்தைச் சுற்றி
ஆடிப்பாடி களிக்கின்றனராம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை அரசமரம் போல்
பூஜிக்கின்றனராம் வழக்கமாக நாம் பூங்காவில் நெடிய மரங்களை அசோக மரம்
என் நினைக்கிறோம் உண்மையில் அவைகள் நெட்டிலிங்க மரங்களே ,இதன்
இலைகள் மாவிலைப்போல் நீளமாகவும் ஆனால் வளைவுகளுடன் காணப்படும் பச்சைநிறபூக்கள்
நட்சத்திரம் போல் பூக்க மேலும் அழகு பெறும் உண்மையான் அசோக மரம் நெட்டி லிங்க
மரம் போல் உயரமாக வளராமல் மற்ற மரங்கள் போல் பரந்து வளர்ந்து சற்று குட்டையான
தோற்றம் தரும் ஆங்கிலத்தில் saraka asoka {caesalpiniacase } என்னும்
இனத்தைச் சேர்ந்தது ,
காதல்ர்கள் காதலிகள் அசோக மரத்தைப் படை எடுங்கள் காதலின் மன்னன் காமதேவனுக்கு
பூக்களை அர்ப்பணியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக